'ஒவ்வொரு ஆண்டு பிறந்தநாளின்போதும், என்னுடைய தொகுதி மக்களுக்கு நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றவே இரண்டாவது முறையாக மதுரா தொகுதியில் போட்டியிட்டேன். இத்துடன் இந்த அரசியல் போதும். அடுத்த தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. என்னுடைய இரண்டு மகள்கள், மருமகன்கள், பேரக்குழந்தைகள், கணவர் தரம்ஜி என என் குடும்பத்தையும், நடனத்தையும் இனி கவனித்தால் போதும்'' என்று கூறும் முன்னாள் கனவுக் கன்னியும், பாஜக எம்பியுமான ஹேமாமாலினி, அரசியலுக்கு குட்பை சொல்ல தயாராகிவிட்டாராம்.
-அருண்.