ரசிகர்களின் கருத்து பரிமாற்றம் மற்றும் நேரில் சந்திப்பதற்காக சொந்த கணக்கில் சமூக வலைதளத்தை பராமரித்து வரும் சுருதிஹாசன், அண்மையில் தர்மசாலாவுக்கு சென்றிருந்தபோது, இமாச்சல பிரதேசத்தில் உள்ள தன்னுடைய ரசிகை காவ்யாவை, நேரம் வரும்போது நேரில் சந்திப்பதாக சொன்ன வாக்குறுதிப்படி தன்னுடைய வருகையை அவருக்கு சமூக வலைதளம் மூலம் தெரியபடுத்தினாராம். தகவல் அறிந்த காவ்யா நான்கு மணி நேர பயணத்திற்குப் பின் தர்மசாலா சென்று சுருதிஹாசனை நேரில் சந்திதுள்ளார். "என்னுடைய வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் ரசிகர்களை நேரில் சந்திப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்கிறார் சுருதிஹாசன்.
- அருண்