காவிரி திட்டத்திற்கு கங்கணா ஆதரவு

கர்நாடகாவில் தலைக்காவிரியில் உற்பத்தியாகி தமிழகத்தில் பூம்புகாரில் கடலில் கலக்கும் காவிரி கரையோரங்களில் மரங்களை வளர்ப்பதன் மூலம் நிலத்தடி நீரை சேமிக்க முடியும்
காவிரி திட்டத்திற்கு கங்கணா ஆதரவு

கர்நாடகாவில் தலைக்காவிரியில் உற்பத்தியாகி தமிழகத்தில் பூம்புகாரில் கடலில் கலக்கும் காவிரி கரையோரங்களில் மரங்களை வளர்ப்பதன் மூலம் நிலத்தடி நீரை சேமிக்க முடியும் என்ற அடிப்படையில் 12 ஆண்டுகளில் 242 கோடி மரக்கன்றுகளை நடும் ஈஷா பவுண்டேஷனின் "காவிரி அழைக்கிறது' என்ற திட்டத்திற்கு கங்கணா ரனாவத் ஆதரவு தெரிவித்துள்ளார். "130 கோடி மக்கள் உள்ள இந்த நாட்டில் ஒரு மரக்கன்றுக்கு ரூ 42 வீதம் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொருவரும் நன்கொடை அளித்தால், காடுகளை வளர்ப்பதன் மூலம் தண்ணீரை சேமிக்க முடியும் என்ற நடைமுறைக்கு சாத்தியமான இத்திட்டத்திற்கு என்னுடைய வருவாயில் கணிசமான தொகையை நன்கொடையாக அளிக்கவுள்ளேன்'' என்று கூறியதோடு ரூ.42 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கியுள்ளார் கங்கணா ரனாவத்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com