பாலிவுட் நடிகை சோனம் கபூருக்கு எண் கணிதம், ஜோசியம் போன்றவற்றில் நம்பிக்கை அதிகமாம். "இதையெல்லாம் மூட நம்பிக்கை என்று ஒதுக்கிவிடமுடியாது. ஒவ்வொரு எண்ணுக்கும், எழுத்துக்கும் அதிர்வுகள் உண்டு. பயணம் செய்யும்போது நான் "ஓம் நமசிவாயா' என்று ஜபித்தபடியே இருப்பேன். இந்த பிரார்த்தனை, கடவுள் நம்பிக்கை எல்லாம் என் அம்மாவிடமிருந்து கற்றுக் கொண்டதாகும்'' என்கிறார் சோனம் கபூர்.