என் வாழ்க்கை நிறைய மாறியிருக்கிறது!: வனிதா

'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகு வாழ்க்கை நிறைய மாறியிருக்கிறது. முக்கியமாக என்னோடு யாரும் இப்போது சண்டை போடுவதில்லை.
என் வாழ்க்கை நிறைய மாறியிருக்கிறது!: வனிதா


'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகு வாழ்க்கை நிறைய மாறியிருக்கிறது. முக்கியமாக என்னோடு யாரும் இப்போது சண்டை போடுவதில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு "குக் வித் கோமாளி' நிகழ்ச்சியும் நல்ல வரவேற்பை கொடுத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்காக ரொம்பவே மெனக்கெட்டு சமைத்தேன். இதை இமாலய வெற்றி என்றுதான் சொல்வேன். ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியைப் பற்றி சொல்லும்போது இது காமெடி ஷோவா இல்ல போட்டியா எப்படி எடுத்துக்கிறது என்ற குழப்பத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கவே ரொம்ப தயங்கினேன். காமெடி பீஸா ஆகிருவோமோ என்றும் பயம் இருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சி எனக்கு நல்ல பாசிட்டிவிட்டியைக் கொடுத்திருக்கிறது. அடுத்தபடியா கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவர் வாய்ப்பு கொடுத்திருக்காங்க. நிறைய பேர் "கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் வனிதா எப்படி என்று ஆச்சர்யமாக கேட்டார்கள். என்னைப் பொருத்தவரைக்கும் நான் நடிகை, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர். பத்துப் படத்துக்கு உதவி இயக்குநராக வேலை பார்த்திருக்கிறேன். அதனால் என்னோட தீர்ப்பு சரியாக இருக்கும் என்று நம்புகிறேன். மனசுல பட்டதை அப்படியே சொல்லிவிடுவேன்'' என்கிறார் வனிதா விஜயக்குமார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com