கை வைத்தியம்!

மாதவிடாய்  சீரடைவதற்கு  நான்கு புதிய  செம்பருத்திப் பூக்களை  வெறும் வயிற்றில்  காலை நேரத்தில்  ஏழு நாட்கள்  சாப்பிட வேண்டும்.
கை வைத்தியம்!


மாதவிடாய்  சீரடைவதற்கு  நான்கு புதிய  செம்பருத்திப் பூக்களை  வெறும் வயிற்றில்  காலை நேரத்தில்  ஏழு நாட்கள்  சாப்பிட வேண்டும்.

கறிவேப்பிலையை  அரைத்து  தினமும்  நெல்லிக்காய்  அளவு  வெறும் வயிற்றில்  சாப்பிட்டு வர  இளநரை  சீக்கிரமே  மறைந்து  போகும்.

சிறிதாக நறுக்கிய முள்ளங்கி,  வாழைத்தண்டுடன்  சுக்கு,  சீரகம்,  ஓமம், பெருங்காயம்,  மஞ்சள் தூள் தேவையான  அளவு  சேர்த்து  கொதிக்க வைத்து  சூப்பாக சாப்பிட  தலைவலி  நீங்கும்.

காலை  உணவுக்கு அரைமணி  நேரத்திற்கு முன் தோல் நீக்கிய  இஞ்சித் துண்டை  சாப்பிடுங்கள். கொழுப்பைக் குறைக்கும்.  தொப்பையைக் கரைக்கும்.

பச்சை  வெங்காயத்துடன்  உப்பைக் கலந்து  சாப்பிட்டால்   வயிற்றுவலி  உடனே  குணமாகும்.

மாதவிடாய்  வயிற்றுவலி  தீர அத்திப்பழத்தை  தேனில்  ஊற வைத்து  சாப்பிட வேண்டும்.

ஆவாரை  இலையை  நிழலில் உலர்த்தி இடித்துத் துளாக்கி  வைத்துக் கொண்டு தேனில் குழைத்துச் சாப்பிட்டு  வந்தால்  உடல் எடை  எளிதாகக் குறையும். இதன் பூவை கொதிக்க வைத்து அதன் சாறை அருந்த சர்க்கரை மட்டுப்படும்.

கடுகு,  நல்லெண்ணெய், ஆலிவ்  எண்ணெய்  சரிவிகிதத்தில்  கலந்து  உடலில்  பூசி  ஒரு மணி  நேரம்  ஊறியபின்  குளித்தால்  தோலில்  உள்ள சுருக்கங்கள்  நீங்கி  மேனி  அழகாக  இருக்கும்.

* காளான்களை  அலுமினியப் பாத்திரத்தில்  சமைக்கக் கூடாது. ஏனென்றால்  அவை பாத்திரத்தை  கருமையாக  மாற்றிவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com