தக்காளியின் மருத்துவப் பயன்கள்

தக்காளி ஜுஸ் செய்து வெறும் வயிற்றில் காலையில் பருகி வந்தால், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
தக்காளியின் மருத்துவப் பயன்கள்

• கண்கள் ஒளியுடன் திகழ உதவுகிறது
• சிறுநீர் எரிச்சலைப் போக்குகிறது.
• தொண்டைப் புண்ணை ஆற்றும்.
• ரத்தத்தை சுத்தமாக்கும்.
• எலும்பை பலமாக்கும்.
• நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். 
• தோலை பளபளப்பாக்கும். ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
• பற்களும், ஈறுகளும் வலிமை பெறும்.
• மலச்சிக்கலை நீக்கும்.
• குடற்புண்களை ஆற்றும்.
• களைப்பைப் போக்கும்.
• ஜீரண சக்தியைத் தரும்.சொறி, சிரங்கு, சரும நோய் களைப் போக்கும்.
• தொற்று நோய்களைத் தவிர்க்கும்.
• வாய், வயிற்றுப் புண்ணை ஆற்றும்.
• கர்ப்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு எலும்பு பலத்தைக் கொடுக்கும்.
• உடலின் கனத்தைக் குறைக்க உதவும்.
• நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு இது.
தக்காளியில் உள்ள சத்துகள்
இரும்புச் சத்து - 0.1 மி.கிராம், சுண்ணாம்புச் சத்து - 3.0 மி.கிராம், வைட்டமின் ஏ - 61 மி.கிராம்
சோர்வு நீங்க:
தக்காளி சூப் செய்து பருகினால் சோர்வும், களைப்பும் நீங்கி விடும்.
தோல் நோய் குணமாக:
நன்கு பழுத்த தக்காளி இரண்டு (அ) மூன்றை எடுத்து, சிறிது சிறிதாக அரிந்து, மிக்ஸியிலிட்டு, ஜுஸ் செய்து வெறும் வயிற்றில் காலையில் பருகி வந்தால், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
மலச்சிக்கல் நீங்க:
காலை, மாலை இரு வேளை தக்காளிப் பழங்களைச் சாப்பிட்டு வாருங்கள், மலச்சிக்கல் அகன்று விடும்.
- சுந்தரி காந்தி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com