சன் தொலைக்காட்சியில் புதியதாக தொடங்கியிருக்கும் தொடர் "சாக்லேட்'. இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கும் இத் தொடர் தொடங்கிய குறைந்த நாட்களிலேயே ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளைக் கொண்டு விட்டது. சின்னதாக சொந்தமாக பேக்கரி வைத்திருக்கும் கருப்பு நிறத்தில் பிறந்த ஒரு ஏழைப் பெண் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகளை மையமாகக் கொண்ட கதை. இந்த தொடரில், நாயகி இனியாவாக நடிப்பவர் பிரியங்கா. தமிழில் இதுவே இவருக்கு முதல் தொடர். மைசூரை பூர்வீகமாகக் கொண்டவர் இவர். பிரியங்காவுக்கு ஸ்கூல் படிக்கும்போதிலிருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்ததாம். இதனால் பதினைந்து வயதிலேயே மாடலிங் துறையில் கால் பதித்திருக்கிறார். பெங்களூர், மைசூரில் நடக்கும் பல்வேறு மாடலிங் ஷோவில் பங்கேற்று பரிசையும் வென்றுள்ளார் இவர். "கிருஷ்ணதுளசி' என்கிற கன்னட சீரியல்தான் இவரது முதல் சீரியல். அதன்பின் கன்னட கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "ராதா ரமனா' என்ற தொடரில் நடித்ததன் மூலம் "சாக்லேட்' தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது இவருக்கு.