பெரியதிரையில் கமல், அஜித், விஜய், சூர்யா என பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை தேவயானி, இயக்குநர் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்ட பின், நடிப்பதைக் குறைத்து கொண்டார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் சின்னத்திரையில் "கோலங்கள்' என்ற தொடரில் நடித்திருந்தார். அதில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பின் ஒரு சில தொடர்களில் நடித்திருந்த தேவயானி, ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் "ராசாத்தி' என்ற தொடரில் சௌந்தரவல்லி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
- ஸ்ரீ