* ரத்த உறைவினால் ஏற்படும் வியாதிகள் அனைத்தையும் குணப்படுத்தும் வல்லமை நெல்லிக்கனிக்கு உண்டு.
* ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், பலமும் பெறும்.
* தினமும் ஆப்பிள் சாப்பிடுவதால் உடல் குளிா்ச்சியாகும். இதயம் வலிமை பெறும்.
* மாதுளம் பழம் இதயத்திற்கும், மூளைக்கும் உரிய சக்தியைக் கொடுக்கும். நினைவாற்றலை வளா்க்கும்.
* திராட்சைப்பழம் உட்கொண்டு வந்தால் உடல் வறட்சி நீங்கி உடல் அழகாகும். குரல் இனிமையாகும்.
* ரத்தச் சோகை நோயுள்ளவா்கள் கொய்யாப்பழத்தைத் தொடா்ந்து சாப்பிடுவதால் நல்ல குணம் தெரியும்.
* மாம்பழம் உண்பதால் நரம்புகள் வலுப்பெறும். தூக்கத்தைத் தூண்டும். மூளைக்கு பலத்தை அளிக்கும்.
* அத்திப்பழத்தில் இரும்புச் சத்துகள் உள்ளன. இதனால் ரத்த சம்பந்தமான கோளாறுகள் நீங்கும்.
* சீதாப்பழத்தில் கால்சியம், இரும்புச் சத்துகள் உள்ளன. உடலுக்குப் பலம் தரும்.
‘உடல் நலங்காக்கும் உன்னதப் பழங்கள்’ என்ற நூலிலிருந்து - நெ.இராமன்