நம்பிக்கை, அடையாளம், கவர்ச்சிகரமான, மரியாதை மற்றும் பிரபலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் கள ஆய்வை நடத்தி வரும் டிஐஏஆர்ஏ (TIARA) என்ற ஆராய்ச்சி நிறுவனம், சமீபத்தில் "பிரபலங்கள் மனித பிராண்டுகளாக' என்பது குறித்து ஓர் ஆய்வை நடத்தி உள்ளது.
பிரபலங்கள் பெரும்பாலும் பிராண்டுகளாகக் காணப்படுகிறார்கள். அவர்களின் வேலை, தனிப்பட்ட மற்றும் தொழில் முறை நடத்தை மற்றும் ஊடகங்களில் உள்ள பிம்பம் அவர்களின் "பிராண்ட் மதிப்புக்கு' குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிப்பதே இந்த ஆய்வுக்குக் காரணம். அந்த வகையில், 23 நகரங்களில் 60,000 நபர்களிடம் விளம்பரங்களில் வரும் 180 பிரபலங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. குறிப்பாக விளம்பரங்களில் பிரபலங்கள் வரும்போது மக்கள் அதை காண அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இதனை அடிப்படையாக கொண்டே கேள்விகள் கேட்கப்பட்டன.
இந்த ஆய்வின்படி இந்தியாவின் மிக அழகானவர்: தீபிகா படுகோனே
இந்தியாவின் மிகவும் கவர்ச்சிகரமானவர்: அலியா பட்
இந்தியாவின் மிகவும் மயக்கும்தன்மை கொண்டவர்: ராதிகா ஆப்தே
இந்தியாவின் மிகவும் கவர்ச்சியானவர்: பிரியங்கா சோப்ரா
இந்தியாவின் மிகவும் நம்பகமானவர்: சாய்னா நேவால்