நடிகை ராதிகா ஆப்தே, இங்கிலாந்தைச் சேர்ந்த இசைக்கலைஞர் பெனடிக்ட் டெய்லர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். கரோனாவுக்கு முன்பு லண்டன் சென்றிருந்த அவர் தற்போது அங்கேயே தங்கி இருக்கிறார். இந்த நிலையில் ராதிகா ஆப்தே சமீபத்தில் தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில் பேட்டியளித்தபோது, அவரது திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ""எனக்குத் திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை. லண்டன் செல்ல விசா பெறுவதில் நிறைய சிரமங்கள் இருந்தன. இந்நிலையில், லண்டனைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்தால் விசா எளிதாகப் பெற்று விடலாம் என்று அறிந்தேன். அதனாலேயே லண்டனை சேர்ந்தவரை திருமணம் செய்தேன். இது நியாயமற்ற செயல்தான்'' என்று தெரிவித்திருந்தார். இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.