கால்பந்து துறையில் இருக்கும் பெண்கள் அதிக அளவிலான பாகுபாட்டைச் சந்திப்பதாக சமீபத்தில் WOMEN IN FOOTBALL என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சுமார், 4000 பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பன்னிரண்டு சதவீதத்தினர் மட்டுமே இந்த பாரபட்சம் குறித்து புகார் அளித்துள்ளனர். அதே சமயம், அதிகாரிகள் இந்த புகார்களுக்கு, ஆதரவு அளிக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இந்த நிலை மாற புது செயல்முறைத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு, பெண்கள் இத்துறையில் பாதுகாப்பாகச் சிறந்து செயல்பட வழிவகுக்கப்படும் என இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.