"உத்தம வில்லன்' படத்தின் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமானவர் ருக்மிணி அசோக்குமார். பாட்டு மட்டும் அல்ல பரத நாட்டியமும் முறையாகக் கற்றவர். இதுவரை, சுமார் 30 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். தமிழ் மட்டுமில்லாது, மலையாளம், துளு போன்ற மொழிகளிலும் இவரது குரல் ஒலித்துள்ளது. பக்திப் பாடல்களும் பாடியுள்ளார்.
தற்போது ஆஸ்திரேலியாவின் தலைநகரமான சிட்னியில் இருக்கும் ருக்மிணி. கரோனா பொதுமுடக்கத்தைப் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ளவும், தனக்குத் தெரிந்த நல்ல விஷயங்களை மக்களுடன் பகிர்ந்து கொள்ளவும் யூ டியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார். இதில் பக்திப் பாடல்கள், குழந்தைகளுக்கான ரைம்ஸ், பெண்களுக்காக ரெசிபி, சுற்றுசூழல், விளையாட்டு, விஞ்ஞானம் என அனைவரும் கண்டு, கேட்டு மகிழ பல்வேறு விஷயங்கள் இருக்கிறதாம். அதில், ஆஸ்திரேலியாவைப் பற்றிய செய்திகள், இந்தியா மற்றும் அதன் திரைப்பட உலகம் போன்றவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வைரலாகியுள்ளது.