சமையலறையில் பல்லிகளின் தொல்லை இருந்தால் வெங்காயச் சருகுகளைப் போட்டு வைத்தால் ஓடி விடும்.
உளுந்து வடைக்கு அரைக்கும் மாவு நீர்த்துப் போய்விட்டால் சிறிது அவல் சேர்த்து வடை தட்டினால் சரியாகிவிடும்
வீட்டுக்குப் பெயிண்ட் அடித்து வாடை அடித்தால் வீட்டின் மூலையில் சிறிது வெங்காயம் நறுக்கிப் போட்டால் பெயிண்ட் வாடை மறைந்துவிடும்
வறுத்த பட்டையை பொடிசெய்து நீரில் கலந்து பெண் பிள்ளைகளுக்குக் கொடுத்து வந்தால் கர்ப்பப்பை பலம் பெறும்
மிளகாய் அரைக்கும்போது சரியாக அரைபடாது.முதலில் மிளகாயுடன் சிறிது கல் உப்பு சேர்த்து அரைத்தால் நன்கு அரைபடும். பிறகு மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைக்கலாம்
பாகற்காய் குழம்போ கூட்டோ வைக்க சிறுசிறு துண்டுகளாக்கி கேரட்டைப் போட்டால் பாகற்காயின் கசப்பு தெரியாது
ஜவ்வரிசி வடாம் முத்து முத்தாக இருக்க வேண்டுமென்றால் ஊற வைக்காமல் தண்ணீருடன் சேர்ந்து கிளற வேண்டும்!
சாம்பார் பொடிக்கு அரைக்கும்போது ஒரு கப் புழுங்கல் அரிசி சேர்த்து அரைக்கவும். இந்தப் பொடியைப்போட்டு சாம்பார் செய்தால் சூப்பராக இருக்கும். திக்காகவும் இருக்கும்
பச்சரிசியை வெந்நீரில் நனைத்து ஆப்பத்துக்கு அரைத்தால் மொறுமொறுப்பும் டேஸ்ட்டும் கூடும்
கடலைமாவு, அரிசிமாவு,பொட்டுக்கடலை மாவை 2:1:1 என்ற விகிதத்தில் கலந்து பஜ்ஜி செய்தால் சோடாமாவு சேர்க்காமலே பஜ்ஜி உப்பி வரும்
மதியம் அரைத்த மாவை இரவில் இட்லி,தோசை செய்ய வேண்டுமென்றால் மாவை மூடி வெயிலில் வைக்கவும். அல்லது மாவு உள்ள பாத்திரத்தை சூடான நீரிலும் வைக்கலாம். மாவு புளித்து இட்லி, தோசைக்கு சரியாக இருக்கும்
மாவில் நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து வார்த்தால் தோசை சாஃப்ட்டாக, டேஸ்ட்டாக இருக்கும்.