உணவுப் பண்டங்களை எண்ணெய்யில் வறுக்கும்போது பாத்திரத்தின் அடியில் சிறிதளவு உப்பை தெளித்து விட்டால் உணவுப் பண்டங்கள் பாத்திரத்தோடு ஒட்டாது.
தயிர், மோர் வைக்கும் பாத்திரங்களை சுத்தம் செய்ததும் வெயிலில் காய வைத்தால் அதிலுள்ள வாடையும் போய்விடும். கிருமிகளும் அண்டாது.
பித்தளை, செம்புப் பாத்திரங்களை வெந்நீரில் சோப்பு போட்டுக் கரைத்த கரைசலில் கழுவி பின்பு வினிகரில் உப்பைக் கலந்து நன்றாகத் தேய்த்தால் பாத்திரங்கள் பளபளக்கும்.
வாணலியில் கறைபோக சமையல் உப்பைப் போட்டு சூடுபடுத்திவிட்டு பேப்பரால் துடைத்தால் பளபளக்கும்.