இட்லி மிருதுவாக இருக்க...

இட்லி மிருதுவாக இருக்க...

இட்லி மென்மையாக வராமல் பாடாய்ப்படுத்தினால் கொள்ளை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்து அரைத்து இட்லிமாவுடன் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வார்த்தால் இட்லி புசுபுசுவென கிடைக்கும்.

இட்லி மென்மையாக வராமல் பாடாய்ப்படுத்தினால் கொள்ளை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்து அரைத்து இட்லிமாவுடன் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வார்த்தால் இட்லி புசுபுசுவென கிடைக்கும்.

இட்லிக்கு அரிசி, உளுந்து ஊற வைக்கும்போது ஒரு தேக்கரண்டி கோதுமையைச் சேர்த்து ஊறவைத்து அரைத்தால் இட்லி பூப்போல மென்மையாக இருக்கும்.

இட்லி ஊற்றும்போது கரண்டியை மாவில்விட்டு அடிவரை கலக்காமல் மேலாக லேசாக கலந்து ஊற்ற இட்லி மிருதுவாக வரும்.

வெளியூர் போகும்போது இட்லியை மிளகாய்ப்பொடி தடவி எடுத்துச் செல்வது வழக்கம். அப்படி எடுத்துச் செல்லும்போது இட்லிமீது லேசாக தண்ணீர் தெளித்துவிட்டுப் பிறகு மிளகாய்ப் பொடியில் தோய்த்து எடுத்துப் போனால் இட்லி வறண்டு காய்ந்து போகாமல் நல்ல சுவையானதாக இருக்கும்.

குக்கர் இட்லித் தட்டில் எண்ணெய் தடவாமலேயே இட்லிகள் எடுக்க இட்லித் தட்டுகளைக் கழுவி எண்ணெய் தடவாமல் மாவை ஊற்றி வேக வைக்கவும். இட்லி வெந்தபின் தட்டுகளைக் கவிழ்த்து பிடித்து அதன் மேலே தண்ணீரை ஊற்றவும். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு இட்லிகளை எடுத்தால் ஒரு சிறுதுளி கூட ஒட்டாமல் வந்துவிடும்.

இட்லி மாவு புளித்து விட்டால் இரண்டு மூன்று டம்ளர் தண்ணீர்விட்டு சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் நீர் மேலே தெளிந்து நிற்கும். அதை வடித்துவிட்டால் புளிப்பு போய்விடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com