தேவையானவை:
அவல் - 1 கிண்ணம்
சோளமாவு - 1 கிண்ணம்
சர்க்கரை - 4 கிண்ணம்
நெய் - 1 கிண்ணம்
கேசரி பவுடர் - சிறிதளவு
ஏலக்காய் - 2
முந்திரிப்பருப்பு - 5
குங்குமப்பூ - சிறிதளவு
செய்முறை:
அவலை மிக்சியில் நைசாக பொடி செய்து கொள்ளவும். அத்துடன் சோளமாவை கலந்து தண்ணீர்விட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும். பிறகு சர்க்கரையை கம்பிப் பதமாக பாகு வைத்து அதில் மாவு கலவையைக் கொட்டி கிளறவும். கேசரி பவுடரைச் சிறிது பாலில் கரைத்து சேர்க்கவும். கலவை இறுகத் துவங்கியதும் நெய்யை ஊற்றி கிளறவும். முந்திரியை வறுத்துப்போட்டு, குங்குமப்பூ, ஏலக்காய்த் தூள் சேர்த்து அல்வா பதம் வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும்.