பனிக்காலத்தில் இனிப்பு நிறைய சாப்பிடக் கூடாது.
வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்க வேண்டும்.
மாலை நேரங்களில் காலில் சாக்ஸ் அல்லது செருப்பு அணிந்தே வீட்டிலும், வெளியிலும் நடமாட வேண்டும்.
குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம் தவிர்க்க வேண்டும்.
மூச்சுப் பயிற்சி, ஆவிபிடித்தல் இவைகளை மறக்கக்கூடாது.
வெந்நீரில் கல்உப்பு போட்டு இருவேளை வாயை கொப்பளிப்பது நல்லது.
இரவில் சூடான பாலில் மஞ்சள்பொடி, பனங்கற்கண்டு, மிளகுப் பொடி சேர்த்து குடிக்க வேண்டும்.
தேனுடன் மிளகுப்பொடி சேர்த்து சாப்பிட்டால் இருமல் சளி வராது.
பனிக்காலத்தில் கை, கால்களை வெந்நீரில் மஞ்சள் பொடி, வேப்பிலை போட்டு வைத்து கழுவ வேண்டும்.
வேப்பிலையை வீட்டில் ஆங்காங்கே வாசல் முதல் பின்புறம் வரை கட்டி தொங்கவிட்டால் பனிக்கால நோய்கள் அண்டாது.
சமையலில் சுக்கு, சீரகம், மிளகு, ஓமம் அன்றாடம் சேர்த்துக் கொண்டால் நன்மைத் தரும்.
இரவில் தாமதமாக உணவை உட்கொள்ளக் கூடாது.