பிரியாணி இலைக்கு லவங்கபத்திரி, பிரிஞ்சி இலை, பட்டை இலை என வேறு பெயர்களும் உள்ளது.
பிரியாணி இலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ப்ளேவோனாய்டுகள், கால்சியம், பொட்டாசியம், மாங்கனீசு, செலினியம் மற்றும் இரும்பு சத்துகள் அதிகம் உள்ளது. பிரியாணி இலையில் உள்ள மருத்துவக் குணங்களை கீழே காணலாம்.
*பிரிஞ்சி இலையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கை, கால், மூட்டு வலிகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. தலைவலியின் போது இந்த எண்ணெய்யை தேய்த்து மசாஜ் செய்தால் தலைவலி உடனே சரியாகி
விடும்.
*பிரியாணி இலையில் உள்ள என்சைம்ஸ் என்ற புரதப் பொருள் உணவை விரைவில் செரிமானம் அடைய உதவுகிறது.
* பிரியாணி இலையை நீரில் போட்டு காய்ச்சி, அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால் சிறுநீரக பிரச்னைகள் மற்றும் சிறுநீரக கற்களை சரி செய்யும். மேலும், இந்த நீரை குடிப்பதால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களை தடுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
*பிரியாணி இலையை தண்ணீரில் போட்டு காய்ச்சி இரவில் குடித்து வந்தால் நல்ல அமைதியான தூக்கம் கிடைக்கும்.
*பிரியாணி இலையை டீயில் சேர்த்து குடித்து வந்தால், மலச்சிக்கல், குடலியக்க பிரச்னைகள் குணமாகும்.
* டைப்- 2 நீரிழிவு நோயாளிகள் பிரியாணி இலையை சேர்த்துக் கொள்வது நல்லது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள உதவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை சிறுமி பாலியல் கொலை: தாய்க்குத் தெரியாமல் உடல் எரிக்கப்பட்டதா?
மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதி மறுதேர்தல் முடிவுகள் - பாஜக அமோக வெற்றி!

இன்றைய செய்திகள் மே 24 - நேரலை!

ஜன நாயகன் புதிய வெளியீட்டுத் தேதி: தயாரிப்பாளர் பதில்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


