நலம் தரும் நம் நாட்டு மூலிகைகள்!

நலம் தரும் நம் நாட்டு மூலிகைகள்!

நம் உடல் நல பாதிப்புகளுக்கு நிவாரணம் தரும் மூலிகைகள் நம் நாட்டில் ஏராளமாக உள்ளது.

நம் உடல் நல பாதிப்புகளுக்கு நிவாரணம் தரும் மூலிகைகள் நம் நாட்டில் ஏராளமாக உள்ளது.  அவற்றில் சில... 

 தொற்று நோய்கள் பரவி வரும்  இந்த காலசூழலில் ஒரு லிட்டர் நீரில் இருபது துளசி இலைகளைப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டி குடித்து வர தொற்று ஏற்படுவதைத் தடுக்கலாம்.

மகத்தான சக்திக்கு வெள்ளை கரிசலாங்கண்ணி, மஞ்சள்காமாலைக்கு மஞ்சள் கரிசலாங்கண்ணி மிகச்சிறந்த மருந்து.

தூதுவளை, மஞ்சள் கரிசலாங்கண்ணி, துளசி, நித்தியகல்யாணி ஆகியவை புற்றுநோயிலிருந்து காக்க சிறப்பாக செயலாற்றும் தன்மை கொண்டவை.

கணையப் புற்று, குடல் புற்று வராமல் தடுக்கும் தன்மை பிரண்டை  துவையலுக்கு உண்டு.

உணவில் வாரம் ஒருமுறை வாழைத்தண்டு சாப்பிட்டு வர கணையத்தில் கற்கள் ஏற்படாது. குடல்வால் அழற்சி நோயும் வராமல் தடுக்கப்படும்.

கொள்ளு உடல் நலம் காக்கும் அற்புத தானியம். கொள்ளுத் துவையல், கொள்ளு சுண்டல் பொடி,  கொள்ளு ரசம் ஆகியவைகளை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் மூச்சிரைப்பு, வாய்வு வலி, தோல் நோய்கள், நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றை குணப்படுத்தும்.

முட்டைகோஸ் சூப், பப்பாளிக்காய் கூட்டு, கீரைத்தண்டு பொரியல், கொள்ளு சுண்டல் ஆகியவைகளை அடிக்கடி உணவில் சேர்த்தால் உடலில் சேரும் கொழுப்பைக் கரைக்கலாம்.

கண் கோளாறுகளுக்கு சிறுகீரை, பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி போன்ற  கீரைகளைஅடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் கண்பார்வைக் குறைபாடுகள் வராமல் காக்கும்.

நரம்புத்தளர்ச்சி உள்ளவர்கள் முருங்கைக் கீரை, முருங்கைக்காய், எள்ளு, மிளகுப் பொடியையும் அடிக்கடி உணவில் பயன்படுத்தினால் நலம் தரும். 

சர்க்கரை நோயோடு காசநோயும் உள்ளவர்கள் முசுமுசுக்கை, தூதுவளை துவையல், வேப்பம் பூ துவையல் சாப்பிட்டு வந்தால் குணம் தெரியும்.

புண்களால் அவதிபடுவோர் பாகற்காய், சுண்டைக்காய், கோவைக்காய் சேர்க்கலாம் .நெல்லிக்காய், வல்லாரைத் துவையல் பயன்படுத்தலாம் .துளசி போட்டு ஊறிய நீரை அருந்தலாம்.

சிறுகீரை, சிறுகுறிஞ்சான், நெருஞ்சில் போன்றவைகள் சிறுநீரக நோயை குணப்படுத்த உகந்தவை.

நினைவுக்கு வல்லாரை, நீரிழிவுக்கு ஆவாரை என்பார்கள். நீர்கடுப்பு , நீர்த்தாரைப் புண், வெள்ளைப்போக்கு, குடல் புண்கள் தோல் நோய்கள் உள்ள நீரிழிவு நோயாளிகளுக்கு ஆவாரம் பூ  அற்புத பலன் தரும். இதன் இருபது இதழ்களை கழுவி சுத்தம் செய்து காலை மாலை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு வர பலன் கிடைக்கும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com