மஞ்சள் தூள் , சோற்றுக் கற்றாழை சேர்த்து கலந்து முகத்தில் பூசி வந்தால் முகப்பரு மறைந்து முகம் பொலிவடையும்.
* பப்பாளிப் பழத்தை அரைத்து சிறிதளவு தேன், பால் சேர்த்து முகத்தில் பூசி சிறிது நேரம் ஊற வைத்துக் கழுவினால் முகம் பளிச்சென இருக்கும்.
* கொஞ்சம் தேன், மஞ்சள் தூள், பன்னீர் கலந்து காலை, மாலை முகத்தில் பூசி பத்து நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால் முகம் பளிச்சென்று ஆகிவிடும்.
* உருளைக் கிழங்குச் சாறு, தக்காளிச் சாறு பப்பாளிச்சாறு மூன்றையும் கலந்து முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.