தேவையானவை:
இஞ்சி - 2 இஞ்ச்
தேங்காய் துண்டு - 50 கிராம்
தனியா - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க
எண்ணெய் - சிறிது
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்து - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை :
முதலில் இஞ்சி தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும். தேங்காய் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். அடுத்து ஒரு வாணலி வைத்து சூடானதும், அதில் எல்லா பொருள்களையும் தனித்தனியாக பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். வறுத்ததை ஆற வைத்து நன்கு ஆறியதும், மிக்ஸியில் போட்டு மையாக அரைக்கவும். வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, கருவேப்பிலை தாளித்து பெருங்காயம் சேர்த்து பரிமாறவும்.