➜வெங்காய ஊத்தப்பம் செய்யும்போது தோசையில் நடுப்பகுதியில் எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்துவிடும்.
➜சப்பாத்திக்கு மாவு பிசையும்போது பழைய சாதத்தை மிக்ஸியில் அரைத்துச் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.
➜திடீர் உப்புமா செய்ய ரவை இல்லையா ரவைக்கு பதிலாக அவலை நன்கு வறுத்து சுடு தண்ணீரில் போட்டு எடுத்து அவல் உப்புமா செய்யலாம்.
➜முள்ளங்கியை இடித்துச் சாறெடுத்து ஒரு தம்ளர் அருந்திவர சிறுநீரக நோய்கள் குணமாகும்.
➜பாலில் வெங்காயம், பூண்டு சேர்த்து வேகவிட்டு அந்தப் பாலைப் பருகி வர நெஞ்சில் சேர்ந்துள்ள சளி நீங்கிவிடும்.
➜முருங்கைக் கீரையை போட்டு மிளகு ரசம் வைத்துச் சாப்பிட்டால் கை, கால் வலிகள் நீங்கும்.
➜புதினா, கொத்துமல்லி, பச்சை
மிளகாய், இஞ்சி சேர்த்து அரைத்து அதனுடன் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து சுண்டலில் சேர்க்க மாறுபட்ட சுவை இருக்கும்.
➜ஆரஞ்சுப் பழத்தோல் , பச்சை மிளகாய் இரண்டையும் நறுக்கி எண்ணெய்யில் வதக்கி வத்தல் குழம்பு செய்தால் அதன் சுவையே அலாதிதான்.
➜தேன்குழல், முறுக்கு செய்யும்போது தேங்காய்ப்பால் சேர்த்துச் செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
➜வெங்காயப் பக்கோடா செய்ய மாவு பிசையும்போது வறுத்த நிலக்
கடலையைப் பொடி செய்து மாவுடன் சேர்த்துப் பிசைந்து பக்கோடா செய்தால் மொறு மொறு வென்று ருசியாக இருக்கும்.
➜முறுக்கு, தட்டை செய்யும்போது மாவுடன் தேங்காய் எண்ணெய் விட்டுப் பிசைந்து செய்தால் வேறு எண்ணெய்யில் சுட்டாலும் தேங்காய் எண்ணெய்யில் செய்தது போல வாசனையாக இருக்கும்.
➜உளுந்து வடை செய்யும்போது மாவில் சிறிதளவு சேமியாவைத் தூள் செய்து போட்டு வடை செய்தால் வடை மொறு மொறுப்பாக இருக்கும்.
➜கோதுமை மாவுடன் சிறிது ரவை சேர்த்துப் பிசைந்து பூரி செய்தால் பூரி எத்தனை நேரமானாலும் மொறு மொறுப்புடன் உப்பலாக இருக்கும்.
- சி.ஆர்.ஹரிஹரன், அலுவா.