சுவையான சத்தான முருங்கைக் கீரை சூப் செய்யும் முறை
தேவையானவை:
சாம்பார் வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 ( பொடியாக நறுக்கியது)
முருங்கைக்கீரை - 1 கைப்பிடி
அரைப்பதற்கு:
மிளகு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி, தனியா - 3 தேக்கரண்டி
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 5 பல், மிளகாய் வற்றல் - 2
தேங்காய்த் துருவல் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருள்கள் அனைத்தையும் அரைத்து எடுத்து 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து பச்சை வாசனைப் போக கொதிக்க வைக்கவும்.
பிறகு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, முருங்கைக்கீரையைப் போட்டு கொதிக்க வைக்கவும். கீரை வெந்ததும் இறக்கி பரிமாறவும்.
( குறிப்பு: தண்ணீருக்கு பதிலாக அரிசி கழுவிய இரண்டாவது நீரை உபயோகப்படுத்தலாம்).
-ஏ.காந்தி, செய்யாறு.