முருங்கைக் கீரை சூப்

சுவையான சத்தான முருங்கைக் கீரை சூப் செய்யும் முறை
முருங்கைக் கீரை சூப்


சுவையான சத்தான முருங்கைக் கீரை சூப் செய்யும் முறை


தேவையானவை:
சாம்பார் வெங்காயம்  -  4 (பொடியாக நறுக்கியது)
தக்காளி  - 1 ( பொடியாக நறுக்கியது)
முருங்கைக்கீரை  - 1 கைப்பிடி
 அரைப்பதற்கு: 
 மிளகு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி, தனியா  -  3 தேக்கரண்டி
இஞ்சி  - சிறிய துண்டு
பூண்டு  -  5 பல், மிளகாய் வற்றல் - 2
தேங்காய்த் துருவல் - 1 தேக்கரண்டி
உப்பு  -  தேவைக்கேற்ப

செய்முறை:   அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருள்கள் அனைத்தையும் அரைத்து எடுத்து 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து  பச்சை  வாசனைப் போக கொதிக்க வைக்கவும்.

பிறகு,  நறுக்கிய  வெங்காயம்,  தக்காளி, முருங்கைக்கீரையைப் போட்டு கொதிக்க வைக்கவும். கீரை வெந்ததும் இறக்கி பரிமாறவும். 

( குறிப்பு: தண்ணீருக்கு பதிலாக  அரிசி கழுவிய இரண்டாவது  நீரை உபயோகப்படுத்தலாம்).

-ஏ.காந்தி,  செய்யாறு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com