சி‌ன்​ன‌‌த்​திரை மின்னல்​க‌ள்!

விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் "குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்று வருகிறது.
சி‌ன்​ன‌‌த்​திரை மின்னல்​க‌ள்!


ஷகீலாவின் நன்றி!


விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் "குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது, இந்த நிகழ்ச்சியின் 2-ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகீலா, கனி, மதுரை முத்து ஆகியோர் சமையல் கலைஞர்களாகவும், பாலா, புகழ், சிவாங்கி, மணிமேகலை என பலர் கோமாளிகளாகவும் இருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரையிறுதிச்சுற்று சமீபத்தில் நடைபெற்றது.

இந்த சுற்றின் முடிவில் இரண்டு நபர்கள் இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில், கனி முதலாவதாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து அஸ்வின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்ட நிலையில், 3-வது நபருக்கான போட்டியில், பாபா பாஸ்கருக்கும், ஷகீலாவுக்கும் இடையே போட்டி நடைபெற்றது. இதில் பாபா பாஸ்கர் மூன்றாவது நபராக இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதனால் ஷகீலா அரையிறுதி சுற்றுடன் வெளியேறினார்.

இது குறித்து ஷகீலா கூறுகையில், "நான் இதுவரை எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், இதுபோன்ற டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டது இதுதான் முதல்முறை. அதனால் நான் இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விஷயமாக நினைக்கிறேன். எனது இமேஜை முற்றிலுமாக மாற்றிய குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு நன்றி' என தெரிவித்தார்.

சின்னத்திரைதான்எனக்கான இடம்!

சின்னத்திரையில் நீண்ட காலமாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் அஞ்சனா. சினிமா நடிகைகளைப் போன்று விதவிதமாக எடுக்கப்பட்ட இவரது புகைப்படங்களை அவ்வப்போது சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். இதனால், இவருக்கென்று தனி ரசிகர் வட்டமே உண்டு. பொதுவாக சின்னத்திரையின் பிரபலங்கள் பலரும் சற்று ஹிட் ஆனதும் பெரியதிரைக்கு சென்றுவிடுவது வழக்கம். ஆனால், அஞ்சனா தொடர்ந்து சின்னத்திரையிலேயே தனது பயணத்தைத் தொடர்கிறார்.

இது குறித்து சோஷியல் மீடியாவில் அவரது ரசிகர் ஒருவர், "நீண்டகாலமாக சின்னத்திரையில் இருக்கும் உங்களுக்கு இதுவரை பெரியதிரையில் வாய்ப்பு கிட்டவில்லையா' என கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்துள்ள அஞ்சனா, "பெரியதிரை, சின்னத்திரை என்ற வித்தியாசத்தை நான் எப்போதும் பார்ப்பதில்லை.

மேலும், நடிப்பில் எனக்கு அவ்வளவு ஆர்வமும் இல்லை; அதனால் இதுவரை நான் பெரியதிரையைப் பற்றி யோசிக்கவேயில்லை என்பதுதான் உண்மை. சின்னத்திரைதான் எனக்கான இடம் எனவே, எனது பணியை சிறப்பாக செய்வதில் மட்டுமே என் கவனத்தை செலுத்தி வருகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com