கடந்த ஆண்டு பொதுமுடக்கம் அறிவிப்பதற்கு முன்பே மும்பை அந்தேரி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் 12-ஆவது தளத்தை சொந்தமாக வாங்கியுள்ள பாலிவுட் நடிகை சன்னி லியோனுக்கு "சிந்தனை செய்' பட இயக்குநர் யுவன், இயக்கவுள்ள பெயரிடப்படாத புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திலும், இன்றைய காலகட்டத்திலும் நடக்கும் சம்பவங்களை வைத்து புனையப்பட்ட இந்த கதையில் சரித்திர நகைச்சுவை திகில் பகுதியில் அரசியாக நடிக்கிறார் சன்னி லியோன். ஏற்கெனவே தமிழில் "வீரமாதேவி' என்ற சரித்திர கதையில் நடித்துவரும் சன்னிலியோன், இயக்குநர் யுவன் இவரிடம் கதையை கூறியவுடன் உடனே சம்மதித்து விட்டாராம்.