தேவையானவை:
டபுள் பீன்ஸ் - அரைகிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
அரைப்பதற்கு:
வரமிளகாய் - 3
தனியா - 1 தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கடுகு - கால்தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
தேங்காய்த்துருவல் - கால் கிண்ணம்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
செய்முறை:
டபுள் பீன்ûஸ 6 மணி நேரம் ஊற விட்டு உப்பு சேர்த்து குழையாமல் வேகவிடவும். வெறும் வாணலியில் வரமிளகாய், தனியா, கடுகு, சீரகம், வெந்தயம் இவற்றை வறுத்து நீர் விட்டு தேங்காய்த்துருவல், மஞ்சள் தூள் சேர்த்து கெட்டியாக நைசாக அரைக்கவும். வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, அரைத்த விழுது சேர்த்து வதக்கி, வெந்த டபுள் பீன்ஸ் சேர்த்துக் கிளறி இறக்கவும். டபுள் பீன்ஸ் சுண்டல் தயார்.