செய்ய வேண்டியவை :
வீட்டில் மங்களகரமான பாடல், பூஜைகள், துதிகள் ஒலிக்க வேண்டும். பாட வேண்டும்.
குத்து விளக்கு இரண்டு வேளையும் பிரகாசமாக எரிய வேண்டும்.
வீட்டில் மாக்கோலம் இட்டு மாவிலை தோரணம் கட்டி மகிழ்ச்சியாக மலர்ந்த புன்சிரிப்போடு பெண்கள் கலகலப்பாக இருக்க வேண்டும்.
அக்கம்பக்கத்தினரை அழைத்து தாம்பூலம் கொடுத்து உபசரிக்க வேண்டும்.
முதல் மூன்று நாட்கள் எலுமிச்சை சாதமும், அடுத்த மூன்று நாட்கள் சர்க்கரைப் பொங்கலும், கடைசி மூன்று நாட்கள் வெண்பொங்கல், தயிர் சாதம் செய்ய வேண்டும். மாலை நேரம் சுண்டல் செய்ய வேண்டும்.
செய்யக் கூடாதவை:
மிளகாய் மற்றும் நெடி வரக்கூடியதான பொடி வகைகளை வறுக்கவோ, இடிக்கவோ கூடாது.
பணம், நகைகள் போன்றவற்றை கடன் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது.
நவராத்திரி ஒன்பது நாள்களும் லட்சுமி ஊசியில் தவம் செய்வதாக ஜதீகம். அதனால் அந்த ஒன்பது நாளும் ஊசி கொண்டு துணி தைக்கக் கூடாது.
இரவு நேரத்தில் வீடு பெருக்கக் கூடாது.
அம்மனுக்கு எடுத்த ஆரத்தியை கால்படும் இடத்தில் கொட்டக் கூடாது.
கொலு வைத்துள்ள அறையில் தொலைக்காட்சி பெட்டி வைத்து அழுகின்ற சத்தம் வரக் கூடாது.
வீட்டில் சண்டை போடக் கூடாது.