தேவையானவை:
சிவப்பு காராமணி - 1 கிண்ணம்
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
குடமிளகாய் - பாதியளவு
கடுகு - 1 தேக்கரண்டி
மெலிதாக நறுக்கிய மாங்காய் துண்டுகள் - 3 தேக்கரண்டி
தக்காளி - 1
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
அரிசிப்பொரி - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
சிவப்பு காராமணியை 6 மணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து குழையாமல் வேக விடவும். வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய தக்காளி, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி வெந்த காராமணி சேர்த்து வதக்கவும். பின்னர், மாங்காய் துண்டுகள், அரிசிப்பொரி சேர்த்து உடனே இறக்கி விடவும். இறக்கிய பின்பு எல்லாவற்றையும் கிளறி விடவும்.