2020-ஆம் ஆண்டு வெளியான சிறந்த மலையாளப் படங்களைத் தேர்வு செய்வதற்காக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியின் தலைவராக நடிகை சுகாசினி நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரள அரசின் சினிமா விருதுகள் தேர்வு கமிட்டியில் உறுப்பினர்களாக இதற்கு முன்பு நடிகைகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் விருது கமிட்டி தலைவராக ஒரு நடிகை நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.
இந்த கமிட்டியில் சுகாசினியை தவிர பிரபல கன்னட இயக்குநர் சேஷாத்திரி, மலையாள இயக்குநர் பத்ரன், ஒளிப்பதிவாளர் முரளீதரன், இசை அமைப்பாளர் மோகன் சித்தாரா, ஒலி வடிவமைப்பாளர் ஹரிகுமார், திரைக்கதையாசிரியர் சசிதரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.