தேவையானவை:
சோளம், புழுங்கலரிசி - தலா ஒரு கிண்ணம்
உளுந்தம் பருப்பு - அரை கிண்ணம்
மிளகாய் வற்றல் - 3
சீரகம், தனியா - தலா ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
சோளத்தில் தண்ணீர் தெளித்துப் பிசறி, மிக்ஸி விப்பரில் ஒன்றிரண்டு முறை சுற்றி எடுத்து தண்ணீரில் கழுவினால் தோல் நீங்கிவிடும். தோல் நீங்கிய சோளத்துடன் புழுங்கலரிசியைச் சேர்த்தும், உளுந்தம்பருப்பை தனியாகவும் தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். சோளம், அரிசி உறியவுடன் சுத்தம் செய்து, அதில் தனியா, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து அரைக்கவும். உளுத்தம்பருப்பை தண்ணீர் தெளித்து நைஸôக அரைக்கவும். அரைத்த மாவுகளை ஒன்றாக கலந்து 3 மணி நேரம் புளிக்க வைத்து, தோசைக்கல்லில் ஊற்றி, இருபுறமும் எண்ணெய் விட்டு தோசைகளாகச் சுட்டு எடுக்கவும்.