தேவையானவை:
துருவிய கேரட் - 2 கிண்ணம்
சர்க்கரை - அரை கிண்ணம்
திக்கானப் பால் - 3 டம்ளர்
நெய் - ஒரு தேக்கரண்டி
துருவிய பாதாம், முந்திரி, பிஸ்தா - ஒரு தேக்கரண்டி
ஏலக்காய்த்தூள் - கால் தேக்கரண்டி
செய்முறை:
அடி கனமான வாணலியில் நெய் ஊற்றி, கேரட் துருவலைப் போட்டு நன்றாக வதக்கவும். மூன்று கிண்ணம் பாலை சுண்டக் காய்ச்சி, வதக்கிய கேரட்டில் விட்டு சர்க்கரை சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து கெட்டியானவுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி, துருவிய பாதாம், முந்திரி, பிஸ்தாவை மேலே தூவவும்.