தேவையானவை:
பால் 2 லிட்டர்
பாதாம் 10
பாசுமதி அரிசி கால் கிண்ணம்
நெய் 2 தேக்கரண்டி
சர்க்கரை அரை கிண்ணம்
குங்குமப்பூ சிறிதளவு
செய்முறை:
வாணலியில் நெய்விட்டு, பாசுமதி அரிசியைச் சேர்த்து, சிவக்க வறுக்கவும். இதைக் கொஞ்சம் பாலில் ஊற வைத்து அரைக்கவும். பாதாமை சூடான நீரில் ஊறவைத்து தோல் நீக்கி, சிறிதளவு பால் சேர்த்து அரைக்கவும். மீதமுள்ள பாலை அடுப்பில் வைத்து சூடாக்கி, கைவிடாமல் கிளறவும். அரைத்த பாசுமதி அரிசி, பாதாம் விழுது சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு சேர்ந்து கொதிக்கும்போது, சர்க்கரை, குங்குமப்பூ சேர்த்து கலந்து, அடுப்பை அணைக்கவும். இதை ஆறவிட்டு ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.