தேவையானவை:
கொத்தவரங்காய் - 100 கிராம்
ஓமம் - அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 சிட்டிகை
கடுகு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், ஓமம், மஞ்சள் தூள் ஆகியவற்றை தாளித்து, பின் நறுக்கிய கொத்தவரங்காயைச் சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் தண்ணீர்விட்டு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து நன்றாக வேக விடவும். நன்கு வெந்ததும் இறக்கவும். பூரி, சப்பாத்தியுடன் பரிமாற சுவையாக இருக்கும்.