இஞ்சியில் பொட்டாசியம், கால்சியம் போன்ற கூறுகள் நிறைந்துள்ளன. அவை ரத்த அழுத்தம், ஆரோக்கியமான எலும்புகளை இயல்பாக்குவதற்கு உவுகிறது. இதில், நார்ச்சத்து உள்ளதால், குடல் உணவை நகர்த்த உதவுகிறது. மலச்சிக்கல், தசைப்பிடிப்பு, வீக்கத்தைக் குறைக்கிறது.
ஆப்பிள் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும். ரத்தச் சோகை குணமாகும். ஜலதோஷம், மூச்சு சம்பந்தமான வியாதிகள், சரும நோய்கள் முதலியன அவ்வளவாகப் பாதிப்பதில்லை.
திராட்சை உடலுக்குக் குளிர்ச்சி தர வல்லது. கோழையை அகற்றும் ஜீரண உறுப்புகளுக்கு வலிமை தருவதுடன், அது பழுதுபட்டால் அதைத் தீர்க்கும் சக்தியும் கொண்டது.
ஆலப்புழை மஞ்சள்தான் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
வெந்தயம் வடநாட்டவர்களால் மேத்தி என குறிப்பிடப்படுகிறது.