தேவையானவை:
கம்பு-100 கிராம்
அரிசி- 50 கிராம்
உளுத்தம் பருப்பு- 50 கிராம்
பச்சை மிளகாய்-3
தேங்காய்த் துருவல்-1 மூடி
தயிர்- 50 கிராம்
கறிவேப்பிலை, கொத்தமல்லி- 1 படி
பெருங்காயப் பொடி- 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையானது
செய்முறை:
அரிசி, உளுத்தம் பருப்பு, கம்பு மூன்றையும் ஊறவைத்து, உப்பு, வெங்காயம், தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைக்கவும். தயிரை தேவையானால் மட்டும் கலக்கவும். வானலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் அப்பமாக மாவை வட்டமாக ஊற்றவும். வெந்ததும் எடுக்கவும்.