தேவையானவை:
கம்பு- 100 கிராம்
உளுத்தம் பருப்பு- 100 கிராம்
பச்சரிசி- 100 கிராம்
வெந்தயம்- 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையானது
செய்முறை:
கம்பு, பச்சரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை முதல்நாளே ஊறவைத்து, அதை அரைத்து உப்பு கலந்து எடுத்துவைக்கவும். மாவு புளித்ததும் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் எண்ணெய்த் தடவி மாவை ஒரு கரண்டி தோசையாக ஊற்றி வெந்ததும் எடுக்க வேண்டும்.