தேவையானவை:
தக்காளி - 200 கிராம்
இடியாப்ப மாவு- 2 கிண்ணம்
பச்சைப் பட்டாணி- 3 மேஜை கரண்டி
துருவிய கேரட்- 2 மேஜை கரண்டி
கரம் மசாலாத் தூள்- 2 மேஜை கரண்டி
குட மிளகாய்- பாதியளவு
(நீளமாக மெலிதாக நறுக்கவும்)
மஞ்சள் தூள்- ஒரு சிட்டிகை
எண்ணெய்- 3 மேஜை கரண்டி
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
இடியாப்ப மாவை ஒரு பாத்திரத்தில் போடவும். அடிகனமான பாத்திரத்தில் 3 கப் நீர் விட்டு, உப்பு சேர்த்து, கொதிக்க வைத்து இறக்கி, இடியாப்ப மாவில் கொட்டிக் கிளறி, இடியாப்பச் சூழலில் மாவை வைத்து இடியாப்பமாக உதிர்த்துவிடவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய குடமிளகாயை வதக்கி, பச்சைப் பட்டாணி கேரட் துருவல், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நறுக்கிய தக்காளியையும் சேர்த்து மேலும் வதக்கி நன்கு சுருண்டு வந்ததும் கரம் மசாலா சேர்த்து கிளறி இறக்கவும். உதிர்ந்த இடியாப்பத்தை இதனுடன் சேர்த்து கலந்துவிடவும்.