தேவையானவை:
கேரட்- 200 கிராம், அன்னாசிப் பழம்-1,ஹ சர்க்கரை பாகு- 200 மி.லி., காய்ச்சிய குளிர்ந்த பால்- 100 மி.லி.
செய்முறை:
கேரட்டை சுத்தப்படுத்திய பிறகு துருவிக் கொள்ள வேண்டும். அன்னாசிப் பழத்தையும் துண்டு, துண்டாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பாலை நன்றாகக் காய்ச்சி குளிர வைக்க வேண்டும். சர்க்கரை பாகையும், குளிர் பாலையும் சேர்க்க வேண்டும். துருவிய கேரட், நறுக்கிய அன்னாசி ஆகிய இரண்டையும் மிக்ஸியில் அரைக்க வேண்டும். பிறகு சிறிது, சிறிதாக சர்க்கரை பாகையும் குளிர் பாலையும் மிக்ஸியில் சேர்க்க வேண்டும். கடைசியாக வடிகட்டி விட்டு பின்னர் சாப்பிடலாம்.