தேவையான பொருள்கள்:
புழுங்கல் அரிசி- 2 கிண்ணம்
தேங்காய்த் துருவல்- 1 கிண்ணம்
சர்க்கரை- 1 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
அரிசியை நன்கு ஊற வைத்துக் கழுவி தேங்காய் சர்க்கரையுடன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவில் உப்பு சேர்த்து கரைத்து, இட்லி தட்டில் ஊற்றி பத்து நிமிடம் வேக வைக்கவும். இட்லி சூடாக இருக்கும்போது, நாழியில் போட்டு பிழிந்து எடுக்கவும். ஆறினால் பிழிவது கஷ்டம். தேங்காய்ப் பாலுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். எலுமிச்சை, தேங்காய், புளி என வெரைட்டி இடியாப்பமும் செய்யலாம்.