தேவையான பொருள்கள்:
பூண்டு - தேவையான அளவு
புளி - 1 கிண்ணம்
எண்ணெய் - தாளிக்க
கருவேப்பிலை - சிறிதளவு
சின்னவெங்காயம் - 2
மஞ்சள் தூள் - 1சிட்டிகை
தக்காளி - 4
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
செய்முறை:
புளியை வெதுவெதுப்பான நீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து சாறு எடுக்கவும். வாணலியை சூடானதும், எண்ணெய் ஊற்றி, கருவேப்பிலை, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து தாளித்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். புளி சாறு, மஞ்சள்தூள், உப்பு, வெல்லம், சாம்பார் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி, கொதிக்க விடவும்.உப்பு, மிளகு தூள் சேர்த்து கொதிவிட்டு அணைக்கவும்.