தேவையான பொருள்கள்:
வடித்த சாதம் - ஒரு கிண்ணம்
நல்லெண்ணெய் - தாளிக்க
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
வெங்காயம் - 1
சிறு பூண்டு - 15 பல்
உப்பு - தேவையான அளவு
மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை- சிறிதளவு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு காயந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வெங்காயத்தை சேர்த்து சிவக்க வதக்கவும். பிறகு நறுக்கிய பூண்டு, உப்பு சேர்த்து வதக்கி , பூண்டின் பச்சை வாசனை போனவுடன் சாதம் சேர்த்து நன்றாக கிளறி, மிளகுத்தூள், கொத்தமல்லித் தழை சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் கழித்து இறக்கவும். சுவையான பூண்டு சாதம் தயார்.