இந்திய வீராங்கனைகள்...!

அலேக்சாண்டரை எதிர்த்துப் போரிட்டு வீர மரணம் அடைந்தவர் ராணிகிருபா தேவி.

போர்க்களத்தில் சாதித்த இந்திய வீராங்கனைகள் சிலர்:

அலேக்சாண்டரை எதிர்த்துப் போரிட்டு வீர மரணம் அடைந்தவர் ராணிகிருபா தேவி.

கோரி முகமதுவை எதிர்த்துப் போரிட்டு அவரை புறமுதுகிட்டு ஓடச் செய்தவர் நாயகி தேவி.

தைமூர் படைகளை எதிர்த்துப் போரிட்டு அவர்களை ஓடச் செய்தவர் ராம் பியாரி குர்ஜரி.

அக்பரின் படைகளை எதிர்த்துப் போரிட்டு விரட்டியவர் ராணி துர்காதேவி.

ஒளரங்கசீப்பை எதிர்த்துப் போரிட்டு மறைந்தவர் பீவி தலேர் கௌர்.

ஒளரங்கசீப் படைகளை வென்று 25 ஆண்டுகள் நல்லாட்சி செய்தவர் கர்நாடகத்தைச் சேர்ந்த மகாராணி சென்னம்மா.

ஆங்கிலேய ஆட்சியாளர்களை எதிர்த்துப் போர் புரிந்தவர் சிவகங்கை சமஸ்தான ராணி வேலு நாச்சியார். அவருடைய தற்கொலைப் படை தளபதி குயிலி.

ஆங்கிலேயப் படையை வீரத்துடன் எதிர்த்துப் போராடி வீர மரணம் அடைந்தவர் ராணி லட்சுமிபாய். அவருக்கு உதவி செய்து  தன்னுடைய உயிரை தியாகம் செய்தவர் சாதாரண குடிமகள் ஜங்காரிபாய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com