வாழைப்பூ, முருங்கைக்கீரை ஆகிய இரண்டையும் சேர்த்து வதக்கி, ஒருவாரம் சாப்பிட்ட வந்தால் குடல் புண், வாய்ப்புண் குணமாகும்.
கோதுமையை பொன்னிறமாக வதக்கி, அரைத்து மாவாக்கி, காலை, மாலை இரு வேளையும் ஒரு அவுன்ஸ் மாவு எடுத்து தேவையான அளவு தேனுடன் பிசைந்து சாப்பிட்டால் கை, கால், மூட்டுவலி நீங்கும்.
ஒரு கோப்பை காபி டிகாக்ஷனை எடுத்து, அதில் பாதி எலுமிச்சம் பழச்சாற்றை பிழிந்து சூட்டுடன் உடனே குடித்தால் தீராத தலைவலி நீங்கும்.
சுக்குத்தூள், பெருஞ்சீரகம் சேர்த்து வாயில் போட்டு சுவைத்தால், வாய்க் கொப்புளங்கள் குணமாகும்.
இடுப்பில் வலி ஏற்பட்டால் இலுப்பை எண்ணெயை பாதிக்கப்பட்ட பகுதியில் பூசி வர குணமாகும்.
பொன்னாங்கண்ணி கீரையுடன் வெள்ளைப் பூண்டை சாப்பிட சர்க்கரை நோய் தீரும்.
வெள்ளை முள்ளங்கியால் சூதகப்பட்டு தடுக்கப்படும். சிவப்பு முள்ளங்கியால் பெரும்பாடு குறையும். இரண்டும் நீரிழிவுக்குச் சிறந்தது.