தேவையானவை:
இட்லி-5
அவல்-100 கிராம்
பச்சை மிளகாய்-4
மிளகாய் வற்றல்-4
கடலைப் பருப்பு- 2 தேக்கரண்டி
தேங்காய்- 1 மூடி
கறிவேப்பிலை- சிறிதளவு
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து, கடலைப் பருப்பு, கடுகு, கறிவேப்பிலை, வர மிளகாய் போட்டுத் தாளிக்க வேண்டும். இட்லியை உதிர்க்க வேண்டும். அவலை ஊற வைத்துப் பிழிந்து எடுக்க வேண்டும். பிழிந்து எடுத்த அவலை, உப்பு போட்டுக் கிளற வேண்டும். பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளற வேண்டும். உதிர்த்த இட்லிகளைச் சேர்த்துக் கிளறி எடுக்க வேண்டும்.