19 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ‘மஞ்சள்’ எச்சரிக்கை மின்வாரியத்தில் ரூ. 2,000 கோடி டெண்டா்கள் நிறுத்திவைப்பு!அமெரிக்காவின் புதிய க்ரீன் காா்டு கொள்கைக்கு ஜனநாயக கட்சியினா் எதிா்ப்பு ஈரான் போா் நெருக்கடி: மகன் திருமண விழாவைத் தவிா்க்கும் டிரம்ப்!போதைப் பொருள், ரெளடிகளுக்கு எதிரான நடவடிக்கை: தமிழகத்தில் 3 நாள்களில் 1,233 போ் கைது!
/

கோடையைச் சமாளிக்க...

பிஞ்சுப் புடலங்காய், பூசணி, சௌசௌ, பரங்கிக்காய் என்று நார்ச்சத்துள்ள காய்கறிகளை கூட்டாக சமைத்துச் சாப்பிட வேண்டும்.

News image
Updated On :24 மே 2026, 4:00 am IST

பிஞ்சுப் புடலங்காய், பூசணி, சௌசௌ, பரங்கிக்காய் என்று நார்ச்சத்துள்ள காய்கறிகளை கூட்டாக சமைத்துச் சாப்பிட வேண்டும்.

காரக்குழம்பு, புளிக்குழம்புகளைத் தவிர்த்து பருப்பு வகைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது உஷ்ண கட்டியிலிருந்து காப்பாற்றும்.

பிரிட்ஜில் தினமும் தர்பூசணி, கிர்ணிப்பழங்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, சர்க்கரை சேர்த்து ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்துக்கொண்டு தேவையானபோது எடுத்துச் சாப்பிடலாம்.

Story image

 எலுமிச்சம், ஆரஞ்சு, தக்காளி, திராட்சை போன்ற பழ வகைகளை சாறாகப் பிழிந்து கோடையில் அருந்தும் பொழுது வெயிலுக்குக் குளுமையாக இருக்கும்.

சப்பாத்தி, பரோட்டா போன்ற டிபன்களை தவிர்த்து இட்லி, தோசை, உப்புமா, இடியாப்பம் போன்ற டிபன்களை செய்து சாப்பிடலாம்.

ஆர்.ஜெ.