(பொருட்பால் - அதிகாரம் 101 - பாடல் 5 )
கொடுப்பதூம் துய்ப்பதூம் இல்லார்க்கு
கோடி உண்டாயினும் இல்.
- திருக்குறள்
பிறர்க்குக் கொடுத்து நிறைவதும்
தான் அனுபவித்து மகிழ்தலும்
இல்லாதவன் வாழ்க்கையில்
எந்தப் பயனும் சேராது
அடுத்தடுத்து செல்வங்கள்
கோடி கோடி சேர்ந்தாலும்
அதனால் பயன் இல்லாமல்
வீணாகப் பொருள் சேர்ப்பார்கள்