பூவே பூவே புதுப்பூவே - நீ
பொழுது விடிந்ததும் ஏன் பூத்தாய்?
வா! வா! குழந்தாய்! சொல்கின்றேன் - நல்ல
வாசம் கொடுக்க நான் பூத்தேன்!
பூவே! பூவே! புதுப்பூவே - நீ
புதுப்புது நிறங்கள் ஏன் படைத்தாய்?
ஆவல் கொண்ட உலகுக்கே }நான்
அழகு கொடுக்க நிறம் படைத்தேன்!
பூவே! பூவே! புதுப்பூவே! - நீ
புதுச்சுவைத் தேனை ஏன் கொடுத்தாய்?
கூவித் திரியும் வண்டெல்லாம் - வந்து
குடித்து மகிழத் தேன் கொடுத்தேன்!
உனக்கிங்கு உதவி யார் செய்தார்? - நீ
உதவி பிறருக்கு ஏன் செய்தாய்?
எனக்கிங்கு இறைவன் உதவி செய்தான்! - அதை
எண்ணிப் பிறர்க்கு நான் செய்தேன்!
பண்ணுருட்டி பரமசிவன்