1. எப்போதும் வயிறு உப்பியே இருப்பான், இவன் யார்?
2. வாலில்லாத பெற்றோருக்கு, வால் உள்ள பிள்ளை..
3. என்னைச் சுமந்தால் உன்னைச் சுமப்பேன்... இப்படிச் சொல்வது யார்?
4. கால் இல்லை, தாவுவான், வாய் இல்லை கத்துவான். இவன் யார்?
5. திறந்து திறந்து மூடினாலும் சிறிதும் ஓசை கேட்காது...
6. நாலு கால்கள் உண்டு. ஆனாலும் நடக்கத் தெரியாது...
7. வெள்ளைப் பெட்டிக்குள் வெள்ளியும் தங்கமும்...
8. உச்சியிலே கிரீடம் கொண்டவளுக்கு உடம்பெல்லாம் கண்கள்...
விடைகள்
1. பானை 2. தவளை,
தவளைக்குஞ்சு (தலைப்பிரட்டை)
3. செருப்பு 4. கடல் 5. கண் இமை 6. நாற்காலி
7. முட்டை 8. அன்னாசிப்பழம்
-ரொசிட்டா